"திராவிட இயக்கங்கள்தான், சமூகநீதி, இட ஒதுக்கீட்டின் சிற்பிகள்" - அதிமுக எம்.பி. தம்பிதுரை பேச்சு

Update: 2022-12-14 03:04 GMT

ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர் உள்ளிட்டோரின் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கும் சிற்பியாக திராவிட இயக்கங்கள் திகழ்கின்றன என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறினார்.

இதுதொடர்பான விவாதத்தின்போது பேசிய அவர், இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் முன்னோடியாக திகழ்கிறது என்று கூறினார்.

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்