வரதட்சணை கொடுமை...பெண் எஸ்.ஐ பரபரப்பு புகார் - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
வரதட்சணை கொடுமை...பெண் எஸ்.ஐ பரபரப்பு புகார் - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
காதல் திருமணம் செய்து கொண்ட தஞ்சை பெண் காவல் உதவி ஆய்வாளரை, வரதட்சணை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். புகழ்வேந்தன் என்பவர், தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சசிரேகா என்பவரை, 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வரதட்சணை கேட்டு சசிரேகாவை புகழ்வேந்தன் அடித்தும் துன்புறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.