டாஸ்மாக் கடையில் மதுபோதையில் நடந்த ரகளை... சிக்கிய சிசிடிவி காட்சிகள்

Update: 2023-01-04 03:01 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டிலை குறைவான விலைக்கு கேட்டு தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விற்பனையாளர் குறைவான விலைக்கு மதுபாட்டிலை தரமறுத்ததால், ஆத்திரமடைந்த ராஜசேகர் என்ற நபர், கடையின் முன்பு இருந்த டேபிளை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டார். தகவலின் பேரில் வந்த போலீசார், அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்