"ஓசி டிக்கெட்-ன்னு சொல்லி மானத்தை வாங்குறாங்க..Free பஸ் கேட்டோமா நாங்க.." பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர்-குமுறும் பெண்கள்

Update: 2023-04-10 05:02 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஓசி டிக்கெட் எனக் கூறி அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக பெண் கூலித் தொழிலாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புவனகிரி, புதிய பாலம் பேருந்து நிலையத்தில், கட்டுமான பணிக்கு சென்று திரும்பிய பெண் கூலித்தொழிலாளிகள் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது குறிஞ்சிப்பாடி செல்லும் அரசு பேருந்தில் ஏற முயன்ற அவர்களை, ஓசி டிக்கெட் என கூறி நடத்துநர் ஒருமையில் பேசி ஏற்ற மறுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் கூலித்தொழிலாளிகள் வேதனை தெரிவக்கும் வீடியோ வெளியாகியுள்ளது...

https://youtu.be/OGWDQeofbLQ

Tags:    

மேலும் செய்திகள்