மாசி மகத்தை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்விற்காக, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து சாமிகள் வாகனங்களில் மேள தாளம் முழங்க எடுத்து வரப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இணைந்து கடலில் நீராடினர்.