பார்ப்பவர்களுக்கெல்லாம் கொலை மிரட்டல் - மூவரை உள்ளே போட்டு நொங்கெடுத்த போலீஸ்

Update: 2022-10-29 13:33 GMT

புதுச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரெனோத். இவருக்கும் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரவுடியான அரவிந்தனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பகை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெனோதை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே அரவிந்தின் கூட்டாளிகளான மணிகண்டன், சந்துரு, முகிலரசன் ஆகியோர் சேர்ந்து, ரெனோத்தை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

மேலும் ரெனோத்தின் மைத்துனரான சிவகிருஷ்னாவிற்கும், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சிவகிருஷ்ணன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் , போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டலில் ஈடுப்பட்ட மூவரையும் கைது செய்து அவர்களை காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்