"மாநில வளர்ச்சி மூலம் நாடு வளர்ச்சி அடையும்" - பிரதமர் மோடி பேச்சு

Update: 2023-04-25 16:06 GMT

கேரளாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, திருவனந்தபுரத்தில், வாட்டர் மெட்ரோ மற்றும் டிஜிட்டல் அறிவியல் பூங்கா போன்ற மாநில அரசின் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் ரயில்வே தொடர்பாக ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். இதனையடுத்து, திருவனந்தபுரம் - ஷோர்னூர் இடையே 366.83 கிலோ மீட்டர் பிரிவை விரைவுப்படுத்தும் ரயில்பாதை சீரமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சித் திறனை உலகம் ஏற்று கொண்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்