மருது சகோதரர்களின் குருபூஜை நினைவேந்தல் - புகைப்படத்திற்கு மலர் தூவி ஏ.சி.சண்முகம் மரியாதை

Update: 2022-10-27 17:07 GMT

சென்னை டிநகரில் உள்ள புதிய நீதி கட்சியின் அலுவலகத்தில் மருது சகோதரர்களின் 221 ஆம் ஆண்டு குருபூஜை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் புகைப்படத்திற்கு புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், சென்னை கிண்டியில் மருது சகோதரர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்