பழங்குடியின மக்களுக்கு இடையே வெடித்த மோதல் - துப்பாக்கிச்சூட்டில் பலியான 16 பேர்

Update: 2023-05-16 17:30 GMT

கோஹாட் மாவட்டம் தர்ரா ஆதம்கேல் பகுதியில் நிலக்கரி சுரங்கப்பாதையின் எல்லையை நிர்ணயம் செய்வதில் இரு சமூகத்தினரிடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் சமூக மக்களுக்கிடையே இருந்து வந்த இந்த தகராறு, திடீரென மோதலாக வெடித்த நிலையில், துப்பாக்கிக்சூடு சம்பவம் நடந்தது. இதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்த போலீசார், மோதலில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்