குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலி.. பாலக்காடு அருகே சோகம்

Update: 2023-05-15 10:13 GMT

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

வல்லூர் மேலக்குளத்தில், சிறுவர்கள் ஆறு பேர் குளிக்க சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக இருவர் நீரில் மூழ்கினர்.

உடனடியாக, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் தேடிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், இரண்டு சிறுவர்களின் உடலையும் மீட்டு, பட்டாம்பியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்