ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்கள் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Update: 2023-02-15 07:08 GMT

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்,பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கஜகஸ்தான் நாட்டில் 10வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவெல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ரோசி மீனா பால்ராஜ், பவிதார் ஆகியோர் சென்னை திரும்பிய நிலையில், அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரர்கள், அரசு வேலை வழங்க கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்