வீட்டுக்குள் சென்ற நபர்..பின்னாடியே அதிவேகத்தில் வீட்டில் புகுந்த கார்

Update: 2022-10-25 11:45 GMT

வீட்டுக்குள் சென்ற நபர்..பின்னாடியே அதிவேகத்தில் வீட்டில் புகுந்த கார் - அடுத்து நடந்த திக் திக் சம்பவம்

பாபநாசம் அருகே கார் வீட்டிற்குள் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவர் தனது வீட்டின் அருகிலேயே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், ராமஜெயம் தனது கடையை பூட்டி விட்டு வீட்டின் முன் அமர்ந்திருந்த போது, அவ்வழியே அதிவேகமாக வந்த கார் ராமஜெயம் வீட்டில் புகுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமஜெயத்தின் மகன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்