துப்பாக்கியால் சுட்ட 'ரவுடி பேபி' மணமகள்.. உயிரை கையில் பிடித்து நின்ற மணமகன்.. மிரளவிடும் வீடியோ

Update: 2023-04-10 06:13 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் திருமண விழாவைக் கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மணப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது... ரக்னி என்ற அந்த மணப்பெண் திருமணம் முடிந்த கையோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் 4 முறை சுட்டார். அருகில் இருந்த மாப்பிள்ளையோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன நடக்கிறதென புரியாமல் பீதியுடன் அமர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், போலீசார் ரக்னி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் விவரமாக ரக்னி தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்