போகியை வரவேற்ற சென்னை மக்கள் - மார்கழி பனியை விஞ்சும் புகைமூட்டம்

Update: 2023-01-14 07:10 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான புகைமூட்டம் காரணமாக, வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அதிகாலை முதலே, தெருகளில் பழைய பொருட்களை எரித்து போகியை வரவேற்றனர்.

இதன் காரணமாக, மார்கழி பனியை விஞ்சும் அளவிற்கு, கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் புகை சூழ்ந்து காணப்படுகிறது.

அதேபோல, புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குரோம்பேட்டை உட்பட பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.

இதனால், மிகுந்த சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்