முன்னாள் முதல்வர் கொடுத்த நிவாரண பணத்தை அவர் மீதே தூக்கி வீசிய பெண் - பரபரப்பு சம்பவம்

Update: 2022-07-16 03:44 GMT

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கொடுத்த நிவாரண தொகையை, அவர் மீதே பெண் ஒருவர் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதிக்கு நேரில் சென்ற சித்தராமையா, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த‌தோடு நிவாரண தொகையையும் வழங்கினார். அப்போது ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை சித்தராமையா மீது வீசி எறிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்