"ப்பா..வேற மாறி..." ஒரே கை, கால் வைத்து நடனமாடி அசத்திய மாணவி | Madurai | Thiruparangundram

Update: 2022-12-01 15:58 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், மாற்றுத்திறனாளி மாணவி நடனமாடி அசத்தினார். கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் தனித் திறமையை வெளிப்படுத்தும் வகையில், திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், மாற்றுத்திறனாளி மாணவி செண்பக முத்து என்பவர், ஒரு கை ஒரு கால் இல்லாத போதிலும், நடனமாடி அசத்தினார். இதைத் தொடர்ந்து, மாணவர்களின், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்