அசுர வேகத்தில் வந்து சாலை தடுப்பில் மோதிய விமானப்படை அதிகாரி கார் - பயங்கர விபத்து..

Update: 2023-07-10 02:15 GMT

கோவை சூலூர் அருகே, விமானப்படை அதிகாரி ஓட்டிவந்த கார், அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. பாணிக் என்பவர், தனது மகளை பயிற்சி பள்ளியில் இறக்கிவிட்டு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ரங்கநாதபுரம் அருகே வரும்போது அவரது கார், சாலை தடுப்பில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்