லாரி டியூப்புகளில் பதுக்கி வைக்கப்பட்ட 55 லிட்டர் சாராயம் பறிமுதல்

Update: 2023-05-26 15:42 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லாரி டியூப்புகளில் பதுக்கி வைப்பட்டிருந்த 55 லிட்டர் சாரயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் சிலர் சாராயத்தை பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், கிராமத்தில் விசாரணை நடத்திய போலீசார், குன்றுமேடு பகுதியில் வசித்து வரும் பரசுராமன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டின் பின்புறத்தில், 2 லாரி டியூப்புகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், பரசுராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்