தகாத உறவால் பறிபோன 3 உயிர்... கள்ளக்காதலன் செய்த வெறிச்செயல்... நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Update: 2023-02-19 16:56 GMT

திருவள்ளூரில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே, தகாத உறவில் இருந்த பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, பீகாருக்கு தப்பியோடிய கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்தனர்.

சோழவரம் அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பீகாரைச் சேர்ந்த குட்டுலு மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துவர்க்கா பார் ஆகியோர் பணியாற்றி வந்தனர். துவார்க்கா பாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மனைவி சுமிதாவுடன், குட்டுலு தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி சுமிதாவின் வீட்டிற்கு வந்த குட்டுலு, அவரை அரிவாளால் தாக்கியதுடன், 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமிதா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், குட்டுலு பீகாருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. பின்னர் அங்கு விரைந்த போலீசார், குட்டுலுவை கைது செய்து, தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்