இலங்கை நிதியமைச்சர் இந்தியா வருகை

கடனுதவி உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச இந்தியா வந்துள்ளார்.

Update: 2022-03-16 02:01 GMT
கடனுதவி உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச இந்தியா வந்துள்ளார். 
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், கடனுதவி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச மற்றும் நிதி அமைச்சக செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்