கடற்படை படகு மோதி உடைந்த மீனவர்கள் படகு - 2 மீனவர்கள் மீட்பு

இலங்கை கடற்படையின் படகு மோதி தமிழக மீனவர்களின் படகு உடைந்ததில் கடலில் தத்தளித்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.;

Update: 2021-10-19 07:02 GMT
இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் அதிகம் மீன்பிடிப்பதாக அங்குள்ள அரசியல் கட்சிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்கிரண், சுகந்தரன், சேவியர் ஆகியோர் இலங்கை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடற்படையின் படகு மோதி மீனவர்கள் படகு உடைந்தது. இதனைத் தொடர்ந்து கடலில் தத்தளித்த சுகந்தரன், சேவியர் ஆகியோர் மீட்கப்பட்டு காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ராஜ்கிரணை இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்