அம்பன்தோட்டா துறைமுகம் - 99ஆண்டுகள் உரிமை - சீனாவுக்கு வழங்கிய இலங்கை அரசு

இலங்கையின், அம்பன்தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகள் சீனாவுக்கு சொந்தமாக்கும் உரிமைக்கான சட்டத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது;

Update: 2021-05-25 12:34 GMT
அம்பன்தோட்டா துறைமுகம் - 99ஆண்டுகள் உரிமை - சீனாவுக்கு வழங்கிய இலங்கை அரசு 

இலங்கையின், அம்பன்தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகள் சீனாவுக்கு சொந்தமாக்கும் உரிமைக்கான சட்டத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி முனையிலிருந்து 290 கிலோ மீட்டர்  தொலைவிலுள்ள அம்பன் தோட்டா துறைமுகம் சுமார் 540 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும், இந்து மகா கடலில் இதன் மூலம் அமைதி கெட்டு போகும் என கூறி, இந்த மசோதாவிற்கு, இலங்கையின் தமிழ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி இலங்கை அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்