வேகமெடுக்கும் புதிய கொரோனா பரவல்..!

இங்கிலாந்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தி தினசரி கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-01-10 03:14 GMT
புதிய கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து அஷ்டன் கால்பந்து மைதானத்தில் தடுப்பூசி மைய கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இங்கிலாந்தில் முதல் கட்டமாக முன்கள வீரர்கள் மற்றும் எளிதில் பாதிக்கக்கூடிய 1 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தி புதிய கொரோனா பரவலின் தினசரி பாதிப்பை குறைக்கவும், அடுத்தகட்ட தடுப்பூசி விநியோக பணிகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்