பரபரப்பான ஜூலியன் அசாஞ்சே வழக்கில் தீர்ப்பு

அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது - மேல்முறையீடு செய்ய அமெரிக்கா முடிவு

Update: 2021-01-05 14:07 GMT
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை இணையதள உடைப்புகள் மூலம் விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே வழக்கில், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது எனக் கூறி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரை அமெரிக்காவுக்கு அனுப்பினால் கடும் மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. லண்டன் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்