சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை பிரதமர் 2 நிமிட மௌன அஞ்சலி
இலங்கையில் சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, உயிரிழந்தவர்களின் நினைவாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
இலங்கையில் சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, உயிரிழந்தவர்களின் நினைவாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து தீபம் ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த அவர், சுனாமி பேரழிவு நடைபெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்த நிலையில், சுனாமியில் இலங்கையைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் உயிரிழந்ததையும், பலர் இருப்பிடம் மற்றும் உடமைகளை, உறவினர்களை இழந்து தவித்ததையும் நினைவு கூர்ந்தார்