கேரளாவில் ஓணத்திற்கு பிறகு அதிகரித்த கொரோனா..! தமிழகம் எதிர்கொள்ள போகும் பிரச்சினை என்ன...?

கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பிறகு, பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

Update: 2020-11-02 10:37 GMT
இந்தியாவை கொரோனா ஆட்டிப்படைத்த காலக்கட்டத்தில், கேரளாவில் மட்டும் மற்ற மாநிலங்களை விட பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. 

ஆனால் ஒணம் கொண்டாட்டத்துக்கு பிறகோ அங்கு நிலைமை தலைகீழானது. 

ஆகஸ்ட் மாத இறுதி வரை சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகி வந்தது.

ஆனால், ஓணம் பண்டிகைக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு, அங்கு பாதிப்பு பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது. 

தற்போது கேரளாவில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்