இனவாதத்துக்கு எதிரான போராட்டம் - பிரபல எழுத்தாளர் சிலை மீது சிவப்பு மை வீச்சு
இத்தாலியில் இன பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம் நடந்துவரும் நிலையில், பிரபல எழுத்தாளரின் சிலை மீது சிவப்பு மை ஊற்றப்பட்டுள்ளது.
இத்தாலியில் இன பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம் நடந்துவரும் நிலையில், பிரபல எழுத்தாளரின் சிலை மீது சிவப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. இன்ரோ மான்டனெல்லி என்ற அவர் மீது மை ஊற்றப்பட்டதால், அரசியல் வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உட்கார்ந்து படிப்பதை போல் இருக்கும் அவரது முழு உருவச் சிலையில், தலை முதல் கால் வரை சிவப்பு மை ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.