நாளை டெல்லி வருகிறார் மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாளை இந்தியாவிற்கு வருகிறார்.

Update: 2020-02-06 05:41 GMT
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாளை இந்தியாவிற்கு வருகிறார். விமானம் மூலம் டெல்லிக்கு வரும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து அவருக்கு, பிரதமர் மோடி நாளை மறுநாள் மதியம் விருந்தளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேசுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்