"பின்லாந்தின் ஸ்திர தன்மையை​ மீட்க நடவடிக்கை" - இளம் பிரதமர் சன்னா மரின் உறுதி​

பின்லாந்து நாட்டின் ஸ்திர தன்மையை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள 34 வயது சன்னா மரின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-11 03:13 GMT
பின்லாந்து நாட்டின் ஸ்திர தன்மையை மீட்டெடுக்க தீவிர  நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள 34 வயது சன்னா மரின் தெரிவித்துள்ளார். அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மரின், கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது, தனது முக்கிய பணிகளில் ஒன்று என குறிப்பிட்டார். அத்துடன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை, தான்  நிறுத்தப்போவது இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்