189 நாட்களில் 14 உயரமான மலைகளை கடந்து நேபாள வீரர் சாதனை

நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2019-11-21 08:53 GMT
நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்த முயற்சியின்போது 14 முறை, கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள சிகரங்களை இவர் அடைந்துள்ளார். ராணுவத்தில் பணிபுரிந்து  வந்த அவர், 80 நாட்களில் 5 உயரமான மலைகளை அடையவே முதலில் திட்டமிட்டதாகவும், பின்னர் அதற்கு விடுமுறை அளிக்கப்படாததை அடுத்து, வேலையை ராஜினாமா செய்துள்ளார். பின்னர் தனது சொந்த வீட்டை விற்று, 189 நாட்களில் 14 உயரமான மலைகளின் சிகரத்தை தொட்டு சாதனையை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்