"இலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்" - அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைநகர் வாஷிங்டனில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோ, இந்த தகவலை வெளியிட்டார். இலங்கையில் பாதுகாப்பு துறையில் சீர்திருத்தம், நம்பகத்தன்மை, மனித உரிமை மற்றும் மீண்டும் நிகழக்கூடாத வன்முறை ஆகியவற்றை, கோத்தபய ராஜபக்சே கருத்தில் கொள்வார் என அமெரிக்கா நம்புவதாகவும், மைக் பாம்பியோ தெரிவித்தார்.