அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடிப்பு
இந்தோனேஷியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை அரசு நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
இந்தோனேஷியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை அரசு நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஜகார்த்தாவில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த புதிய சட்டம் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தால் போர்களம் போல இந்தோனேஷிய நகரங்கள் காணப்படுகின்றன.