இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் 77 கிலோ கஞ்சா கடத்தல் - போதை தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை
இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் வைத்திருந்த 77 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கடற்படை போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.
இலங்கை, காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் வைத்திருந்த 77 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கடற்படை போலீசார், மூவரை கைது செய்துள்ளனர். கடலில் ரோந்து பணி மேற்கொண்டபோது, சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த படகை சோதனை செய்ததில் 77 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டு படகை பறிமுதல் செய்தனர். படகில் இருந்த 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வடமராட்சி மற்றும், மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அதனையடுத்து, தீவிர விசாரணைக்காக மூவரையும் தேசிய போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடற்படை போலீசார் ஒப்படைத்தனர்.