கலவரமாக மாறிய ஆட்டோ விபத்து...

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இன்று மோதல் வெடித்தது.;

Update: 2019-05-05 20:09 GMT
இலங்கையில் தீவிரவாத தாக்குதல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இன்று  மோதல் வெடித்தது. நீர்கொழும்பு பகுதியில் அட்டோ ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் இரு தரப்பு மக்களுக்கு இடையே வாக்குவாதம் உண்டாகி கலவரமாக மாறியது.  இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் கற்களை வீசியும், கைகளில் கிடைத்த ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர். வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்