வரலாற்று சிறப்புமிக்க நோட்ர-டாம் தேவாலயத்தில் தீ விபத்து

பிரான்ஸின் நாட்டில் உள்ள நோட்ர-டாம் என்ற பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு உலக தலைவர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2019-04-17 12:38 GMT
பிரான்ஸின் நாட்டில் உள்ள நோட்ர-டாம்  என்ற பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு உலக தலைவர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர். தலைநகர் பாரீஸில் உள்ள சுமார் 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில், நேற்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு, 30 நிமிடத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் தேவாலயம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில், ஐந்தாண்டுகளுக்குள் தேவாலயம் மிகவும் அழகான முறையில் மறுசீரமைக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்