கார்குண்டு தாக்குதல் - 21 பேர் உயிரிழப்பு : கொலம்பியா போலீஸ் பயிற்சி மையத்தில் பயங்கரம்

கொலம்பியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் போகோடாவில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

Update: 2019-01-19 02:45 GMT
கொலம்பியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் போகோடாவில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அங்கு வேகமாக நுழைந்த மர்ம கார் ஒன்று திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. அங்கிருந்த பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். காயமடைந்த 68 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காரில் 80 கிலோ எடை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருக்கலாம் என்றும், காரில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி, கார் வெடித்து சிதறியதில் கொல்லப்பட்டதாக கொலம்பியா நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்