இலங்கையில் 27 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு

இலங்கையில் விடுதலைப்புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்து பதவி விலகிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-22 02:02 GMT
மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பின்னர், 27 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிபர் சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் விடுதலைப்புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சரவையில் கல்வி இலாகா ஒதுக்கப்பட்டு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்