இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்பு

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பத்தால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 50 நாட்களுக்கு முன்பு புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நேற்று ராஜினாமா செய்தார்.

Update: 2018-12-16 08:22 GMT
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பத்தால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 50 நாட்களுக்கு முன்பு  புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நேற்று  ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.  கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு அதிபர் சிறிசேன, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ரனிலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தாலும்,  தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையில்  செயல்படும் என்று கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்