பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

பிரன்ஸில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சுட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Update: 2018-12-12 07:10 GMT
பிரன்ஸில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சுட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ட்ராஸ்பர்க் நகரில் பரிசு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்திருந்தனர். அங்கு மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சுட்டில் சுற்றுலா பயணி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் 11 பேர் படுகாயமடைந்தனர். இதில் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கி சுட்டில் படுகாயமடைந்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்