தாய்லாந்தில் தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம் : மனைவிகளை தூக்கி கொண்டு ஓடிய கணவர்கள்

தாய்லாந்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம், நேற்று பாங்காங் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 300 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

Update: 2018-11-25 12:42 GMT
தாய்லாந்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம், நேற்று பாங்காங் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 300 ஜோடிகள் கலந்து கொண்டனர். போட்டியின் விதிப்படி தங்களது திருமண உடையில் அணிவகுத்த தம்பதியினர், சுமார் 3 கிலோ மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டனர். முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் மனைவிகளை, அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரம் கணவர்கள் தூக்கி செல்ல வேண்டும். இதில் வெற்றி பெற்ற தம்பதியருக்கு தேன் நிலவுக்கான சுமார் 42 லட்சம் மதிப்பிலான பரிசுத் கூப்பன் வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்