"சீட் பணத்தை வாங்கிதான் மகளுக்கு கல்யாணம் பண்ணனும்" - ஒரு தாயின் கதறல்
ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள குடும்பத்தை கண்டு பிடித்து தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்மல்க புகார் அளித்துள்ளனர்....
"சீட் பணத்தை வாங்கிதான் மகளுக்கு கல்யாணம் பண்ணனும்" - ஒரு தாயின் கதறல்
ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள குடும்பத்தை கண்டு பிடித்து தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்மல்க புகார் அளித்துள்ளனர். சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் என ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரை நம்பி 60-க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். சீட்டு முடிய 2 மாதங்கள் உள்ள நிலையில், ஜோதி, அவரது கணவர், மகன், மருமகள் உடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்தனர். ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றி தலைமறைவானவர்களை கண்டுபிடித்து, பணத்தை திருப்பி தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்.