பிள்ளைகளை கூப்பிட்டு தாய் கடைசியாக சொன்ன வார்த்தை - நம்பிய குழந்தைகளை கதறவிட்ட சோகம்

Update: 2024-04-18 07:43 GMT

#chennai | #Crime

பிள்ளைகளை கூப்பிட்டு தாய் கடைசியாக சொன்ன வார்த்தை - நம்பிய குழந்தைகளை கதறவிட்ட சோகம்

மதுரவாயலில், 2 பிள்ளைகளை தவிக்கவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் கண்ணன் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜா - தேவி தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளன. வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில், 2 பிள்ளைகளை வெளியே சென்று விடுமாறு கூறிய தேவி, வீட்டின் கதவை மூடிய நிலையில் நீண்ட நேரமாக திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்