வீட்டில் வேலை செய்து வந்தவர் மீது நடிகை பரபரப்பு புகார்

Update: 2022-10-20 10:19 GMT

வீட்டில் வேலை செய்து வந்தவர் மீது நடிகை பரபரப்பு புகார்

நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்னை அறிந்தால், நிமிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.

இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் இருந்த 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கை கடிகாரம், 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கை கடிகாரம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாக கூறப்படுகிறது.

கடந்த 2 வருடங்களாக இவரது வீட்டில் வேலை செய்து வந்த நபர், இந்த பொருட்களை எல்லாம் திருடிச் சென்றதாக பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்