கொளுத்தும் வெயிலுக்கு இடையே...ஒரு குளுகுளு நியூஸ்

Update: 2024-03-29 12:31 GMT

அடுத்த 5 நாள்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 2-ஆம் தேதி மற்றும் 4-ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்