2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை..

Update: 2024-04-26 02:05 GMT

அரசு பள்ளியில் 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் 24-ஆம் தேதிவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 884 மாணவர்கள் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 793 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்