"ஆவணத்தோடு வந்தாலும் பறிமுதல் தான்.." - குமுறும் நகை வியாபாரிகள்

Update: 2024-03-28 11:50 GMT

உரிய ஆவணங்களுடன் தங்கத்தை எடுத்து சென்றாலும், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வதாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம், தங்க நகை வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உரிய ஆவணத்துடன் தங்கம் கொண்டு சென்றாலும் தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்வதாகவும், இதனால் திருமண நிகழ்ச்சிகளுக்கு உரிய நேரத்தில் தங்கத்தை கொண்டு செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்