"எல்லாம் பொய்; மூடி மறைக்க முயல்வதா..?" - அரசுக்கு ராமதாஸ் திடீர் கோரிக்கை

Update: 2024-05-09 10:45 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 4 ஆயிரத்து 500 நெல்மூட்டைகள்தான் பாதிக்கப்பட்டதாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெளியிட்ட தகவல் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கான கிடங்குகள், வணிகர்களால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்