மதுபோதையில் காவலர் அட்டூழியம்.. சிறுவன் முதல் பெரியவர் வரை.. ஒருவர் விடாமல் சொல்லும் ஒரே குற்றம்

Update: 2023-12-14 17:30 GMT

சிவகங்கை அருகே மதுபோதையில் காவலர், பொதுமக்களிடம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள பனங்காடி சாலையில், அன்னை இல்லம் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலர் செல்லமுத்து, பணியில் இருக்கும்போதே மது அருந்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அவர், சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்