சென்னைக்குள் செல்ல முடியாமல் தவிப்பு...போதிய பேருந்துகள் இல்லை - குமுறும் பயணிகள்

Update: 2024-01-18 09:07 GMT

வெளியூர்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி சென்று கோயம்பேடு செல்கின்றன. இதனால் தாம்பரம் வழியாக சென்னை செல்வோர் வண்டலூரில் இறக்கிவிடப்படுவதால் வண்டலூர் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகருக்குள் செல்ல கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஆட்டோ வாடகை கார் ஓட்டுனர்கள் கூடுதலாக 2 மடங்கு கட்டணம் கேட்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்