கிணத்துல பாதி.. கிச்சனில் மீதி லெஜண்ட் பைக்கை திருடி பின் மெக்கானிக் செய்த பகீர் காரியம்

Update: 2024-04-26 09:16 GMT

கிணத்துல பாதி.. கிச்சனில் மீதி லெஜண்ட் பைக்கை திருடி பின் மெக்கானிக் செய்த பகீர் காரியம் - வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலீஸ்

நாமக்கல் அருகே, இருசக்கர வாகனத்தைத் திருடி உதிரி பாகங்களைத் தனித்தனியாக பிரித்து, கிணற்றுக்குள் போட்ட மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். சேந்தமங்கலம் அருகே வாழவந்தி கோம்பை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது யமஹா பைக், கடந்த 11-ம் தேதி காணாமல் போனது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இருசக்கர வாகனத்தை திருடியது காரவள்ளி பகுதியை சேர்ந்த மெக்கானிக் சுப்பிரமணி என தெரியவந்தது. பின்னர் சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்தியதில், அவர் அளித்த வாக்குமூலத்தைக் கண்டு போலீசார் அதிர்ந்து போயினர். திருடப்பட்ட இருசக்கர வாகனம் கிணற்றுக்குள் போட்டதாகக் கூற, வாகனத்தின் உரிமையாளரான தமிழ்ச்செல்வன் அதிர்ந்து போனார். அதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த இருச்சக்கர வாகனத்தை போலீசார் மீட்டபோது, உதிரி பாகங்கள் கழட்டிய நிலையில் கிடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்